Skip to main content

சுதந்திர தின நிகழ்வுகள் குறித்து செய்தி சேகரிக்க நியமிக்கப்பட்ட 8 ஊடகவியலாளர்களுக்கு கொவிட்-19

Feb 05, 2021 218 views Posted By : YarlSri TV
Image

சுதந்திர தின நிகழ்வுகள் குறித்து செய்தி சேகரிக்க நியமிக்கப்பட்ட 8 ஊடகவியலாளர்களுக்கு கொவிட்-19 

73ஆவது சுதந்திர தின கொண்டாட்டங்கள் குறித்த செய்திகளை சேகரிக்கத் தயாராக இருந்த ஊடகவியலாளர்கள் 8 பேர் கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளனர்.



சுமார் 200 ஊடகவியலாளர்கள் மீது நடத்தப்பட்ட சீரற்ற பிசிஆர் சோதனைகளின் போதே பாதிக்கப்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நாலக களுவெவ தெரிவித்தார்.



ஆரம்பத்தில் 18 ஊடகவியலாளர்கள் பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்பட்டதாகவும் பின்னர் அவர்களில் 8 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டதாகவும் களுவெவ தெரிவித்தார்.



இவர்களில் பெருமளவானோர் இலத்திரனியல் ஊடகங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.



இது தொடர்பில் சம்பந்தப்பட்ட ஊடக நிறுவனங்களுக்கு தகவல் தெரிவிக்கப் பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை