பிரித்தானியாவில் பத்து மில்லியன் மக்களுக்கு கொவிட்-19 தடுப்பூசி!
Feb 04, 2021 209 views Posted By : YarlSri TV
பிரித்தானியாவில் பத்து மில்லியன் மக்களுக்கு கொவிட்-19 தடுப்பூசி!
பிரித்தானியாவில் பத்து மில்லியன் மக்கள் தற்போது கொரோனா வைரஸ் தடுப்பூசியின் முதல் அளவை பெற்றுள்ளதாக சுகாதார செயலாளர் மாற் ஹான்காக் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘இந்த வைரஸுக்கு எதிரான நமது தேசிய முயற்சியில் இது மிகவும் குறிப்பிடத்தக்க மைல்கல்லாகும்.
ஒவ்வொரு தடுப்பூசியும் நம் அனைவரையும் சற்று பாதுகாப்பானதாக்குகிறது. அனைவருக்கும் நன்றி கூற விரும்புகிறேன்’ என கூறினார்.
நேர்மறையான பரிசோதனையின் 28 நாட்களுக்குள் பிரித்தானியாவில் மேலும் 1,322பேர் இறந்துள்ளனர், மேலும் 19,202 தொற்றுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இது பிரித்தானியாவின் மொத்த இறப்புகளின் எண்ணிக்கையை 109,335 ஆகவும், மொத்த தொற்றுகளின் எண்ணிக்கை 3,871,825 ஆகவும் கொண்டு வருகிறது.
பெப்ரவரி 2ஆம் திகதி வரையிலான அரசாங்க தரவுகளின்படி, மொத்தம் 10,021,471 பேருக்கு முதல் டோஸ் மற்றும் 498,962 பேருக்கு இரண்டாவது டோஸ் அளவையும் பெற்றுள்ளனர்.
வாரத்தின் தொடக்கத்தில் இருந்து புள்ளிவிபரங்கள் 80 வயதிற்கு மேற்பட்ட 10பேரில் ஒன்பது பேரும் 70 வயதிற்கு மேற்பட்டவர்களும் தங்கள் முதல் அளவையும் கொண்டிருந்தனர் என்பதைக் காட்டுகிறது.
பெப்ரவரி 15ஆம் திகதிக்குள் மிகவும் பாதிக்கப்படக்கூடிய 15 மில்லியனுக்கு முதல் அளவிலான கொரோனா வைரஸ் தடுப்பூசியை வழங்க அரசாங்கம் தற்போது இலக்கு வைத்துள்ளது.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1487 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1487 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1488 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1488 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1488 Days ago