Skip to main content

மன்னாரில் மீன்பிடிப் படகில் சென்ற மூன்று மீனவர்களைக் காணவில்லை

Feb 02, 2021 179 views Posted By : YarlSri TV
Image

மன்னாரில் மீன்பிடிப் படகில் சென்ற மூன்று மீனவர்களைக் காணவில்லை 

மன்னாரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (31) முதல் மீன்பிடிப் படகு ஒன்றிலிருந்த மூன்று மீனவர்கள் காணாமல் போயுள்ளதாக அனைத்திலங்கை மீனவர் தொழிற்சங்கத்தின் செயலாளர் தினேஷ் பெர்னாண்டோ தெரிவித்தார்.



அவர் மேலும் கூறுகையில்,

“ஜனவரி 31 ஆம் திகதி அதிகாலை 2 மணிக்கு மன்னாரிலுள்ள ஒலதுடுவாவவுக்குச் சென்ற இவர்கள் பிற்பகல் 2 மணிக்கு திரும்புவர் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், படகையும் அதில் இருந்த மூன்று பேரையும் காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது” என்று அவர் கூறினார்.



காந்தன், கொட்வின் மற்றும் பாண்டியன் ஆகிய மூவரை ஏற்றிச் சென்ற OFRPA0839 என்ற படகே காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



“காணாமல் போன படகு மற்றும் நபர்களை அடையாளம் காண எமக்கு உதவ பொதுமக்களின் ஒத்துழைப்பைக் கோருகிறோம்” என்று பெர்னாண்டோ மேலும் கூறினார்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை