Skip to main content

‘பொத்துவில் முதல் பொலிகண்டி வரை’ எழுச்சிப் போராட்டத்துக்கு முழு ஆதரவு

Feb 02, 2021 178 views Posted By : YarlSri TV
Image

‘பொத்துவில் முதல் பொலிகண்டி வரை’ எழுச்சிப் போராட்டத்துக்கு முழு ஆதரவு 

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான அகிம்சை வழி போராட்டத்துக்கு வடக்கு மாகாண மத அமைப்புகள், தமிழ் தேசியக் கட்சிகள் மற்றும் பொது அமைப்புகள் தங்கள் ஆதரவை முழுமையாக வழங்குவதாக அறிவித்துள்ளன.



அத்துடன் வடக்கு மாகாணத்தில் அனைத்து மாவட்டங்களிலும் பொது அமைப்புகளையும் மக்களையும் ஒன்றிணைத்து மாபெரும் எழுச்சியை உருவாக்க மாகாண, மாவட்ட இணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.



பொத்துவிலில் ஆரம்பமாகும் பேரணி, முக்கிய நகரங்களில் நடை பவனியாகவும் ஏனைய இடங்களில் வாகனப் பேரணியாகவும் பொலிகண்டியை வந்தடையும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.



யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி வளாகத்திலுள்ள தந்தை செல்வா கலையரங்க மண்டபத்தில் நேற்று முற்பகல் 11.40 மணிக்கு ஆரம்பமான இந்தக் கூட்டம் சுமார் 3 மணி நேரம் இடம்பெற்றது.

வடக்கு மாகாண சமயத் தலைவர்கள், சிவில் சமூக அமைப்புகள் மற்றும் தமிழ் தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர்.


Categories: இலங்கை
Image

சில சுவாரஸ்யமான செய்திகள்

தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை