Skip to main content

டெல்லியில் தடுப்புகளை அமைக்கும் மத்திய அரசு : காங்கிரஸ் கண்டனம்!

Feb 02, 2021 193 views Posted By : YarlSri TV
Image

டெல்லியில் தடுப்புகளை அமைக்கும் மத்திய அரசு : காங்கிரஸ் கண்டனம்! 

விவசாயிகளின் போராட்டத்தைத் தடுக்க டெல்லியில் தடுப்புகளை அமைத்து வரும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.



காசிப்பூர் எல்லை, சிங்கு, திக்ரி பகுதிகளில் இருந்து டெல்லிக்குள் நுழையும் விவசாயிகளைத் தடுக்க  தடுப்புகள், முள்வேலிகள் அமைக்கப்பட்டு வருகின்றன.



இதற்கு எதிர்க்கட்சிகள் பல கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி தனது ருவிட்டர் பக்கத்தில் மேற்படி குறிப்பிட்டுள்ளார்.



குறித்த பதிவில் மேலும் தெரிவித்துள்ள அவர், “சுவர்களை கட்டாதீர்கள் பாலங்களைக் கட்டுங்கள்” எனப் பதிவிட்டுள்ளார்.



மத்திய அரசின் மூன்று புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி விவசாயிகள் டெல்லியில் எல்லைகளில் 70 நாட்களைக் கடந்து முற்றுகைப் போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர்.



இதுவரை மத்திய அரசுடன் 11 முறை பேச்சுவார்த்தை நடைபெற்றும் முடிவு எட்டப்படாத நிலையில் விவசாயிகள் கடந்த 26 ஆம் திகதி குடியரசு தினத்தன்று மாபெரும் டிராக்டர் பேரணியை முன்னெடுத்திருந்தனர். இந்த பேரணி கலவரம் ஏற்பட்டது.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை