Skip to main content

சுகாதார துறையினருக்கு இன்றையதினம் (30) கொவிட்-19 தடுப்பூசி போடப்பட்டது!

Jan 30, 2021 178 views Posted By : YarlSri TV
Image

சுகாதார துறையினருக்கு இன்றையதினம் (30) கொவிட்-19 தடுப்பூசி போடப்பட்டது! 

வவுனியா வைத்தியசாலையில் பணியாற்றும் மருத்துவ சேவையாளர்கள் மற்றும் சுகாதார துறையினருக்கு இன்றையதினம் (30) கொவிட்-19 தடுப்பூசி போடப்பட்டது.



இந்தியாவினால் நன்கொடையாக வழங்கப்பட்ட கொவிட்-19, “கொவிஷெல்ட்” தடுப்பூசிகள் வடக்குமாகாணத்தில் உள்ள 5 மாவட்டங்களிலும் மருத்துவர்கள், தாதியர்கள், மருத்துவ சேவையாளர்கள், பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் மற்றும் ஊழியர்களுக்கு ஏற்றும் பணி இன்று தொடக்கம் முன்னெடுக்கப்படவுள்ளது.



அந்தவகையில் வவுனியா மாவட்டத்துக்கு ஆயிரத்து 700 டோஸ்கள் தடுப்பூசி மருந்துகள் நேற்று வழங்கப்பட்டது. அதனை செலுத்தும் பணிகள் வவுனியா வைத்தியசாலையில் இன்று முன்னெடுக்கப்பட்டது.



இதன்போது பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் மகேந்திரன், வைத்தியசாலை பணிப்பாளர் காண்டீபன் மற்றும் சுகாதாரவைத்திய அதிகாரிகள் உட்பட பலருக்கு தடுப்பூசிகள் வழங்கப்பட்டது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

5 Days ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

5 Days ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

5 Days ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

5 Days ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

5 Days ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

5 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை