இலங்கை குறித்த ஐ.நா. ஆணையாளரின் அறிக்கைக்கான பதில் இன்று கையளிக்கப்படும் – தினேஸ்!
Jan 27, 2021 163 views Posted By : YarlSri TV
இலங்கை குறித்த ஐ.நா. ஆணையாளரின் அறிக்கைக்கான பதில் இன்று கையளிக்கப்படும் – தினேஸ்!
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் மிச்செலே பச்செலெட்டினால் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள அறிக்கைக்கு பதிலளிக்கும் முழுமையான ஆவணம் இன்று (புதன்கிழமை) ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் கையளிக்கப்படும் என வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்த்தன தெரிவித்தார்.
இந்த விடயம் தொடர்பாக சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்துரைக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் முழுமையாக கலந்துரையாடப்பட்டுள்ளது என்றும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கை தொடர்பில் முன்வைத்துள்ள அறிக்கையில் பல விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அவை அனைத்துக்கும் இன்று கையளிக்கப்படவுள்ள ஆவணத்தில் பதிலளிக்கப்படுவதாகவும் அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
குறித்த அறிக்கைக்கான பதில் அடங்கிய ஆவணம் நேற்று மாலை கையளிக்கப்படவுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் செயலாளர், அட்மிரல் பேராசிரியர் ஜயனாத் கொலம்பகே நேற்று தெரிவித்திருந்தார்.
எனினும் குறித்த அறிக்கை நேற்றையதினம் கையளிக்கப்படாத நிலையில், இன்றைய தினமே கையளிக்கப்படவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்த்தன தெரிவித்தார்.
46ஆவது ஐ.நா மனித உரிமைகள் பேரவை அமர்வில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரினால் சமர்ப்பிக்கப்படவுள்ள அறிக்கையில், இலங்கை குறித்த விசாரணையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்குப் பரிந்துரைப்பதன் மூலம், உலகளாவிய அதிகார வரம்பின் கீழ் விசாரணைகள் மற்றும் வழக்குகளை நிறுவுதல் மற்றும் சர்வதேச குற்றங்களில் சிக்கியுள்ள இலங்கை அதிகாரிகள் மீது பொருளாதாரத் தடைகளை விதித்தல் உள்ளிட்ட காட்டமான தீர்மானங்கள் மற்றும் முடிவுகள் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1488 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1488 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1488 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1488 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1488 Days ago