Skip to main content

வடக்கு, கிழக்கு உள்ளிட்ட நாட்டின் பல இடங்களில் மழை அதிகரிக்கும்

Jan 28, 2021 188 views Posted By : YarlSri TV
Image

வடக்கு, கிழக்கு உள்ளிட்ட நாட்டின் பல இடங்களில் மழை அதிகரிக்கும் 

நாட்டின் சில பகுதிகளில் இன்று (வியாழக்கிழமை) முதல்  மழை நிலைமை மேலும் அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.



அதன்படி வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் மழை நிலைமை இன்றிலிருந்து அதிகரிக்கும் என அத்திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.



வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் தொடர்ச்சியாக  மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.



கிழக்கு மாகாணத்தில் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.



வடமத்திய, மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக அத்திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை