உலகின் 9 நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது – ஐ.நா சபையில் இந்தியா!
Jan 27, 2021 197 views Posted By : YarlSri TV
உலகின் 9 நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது – ஐ.நா சபையில் இந்தியா!
உலகின் ஒன்பது நாடுகளுக்கு 60 இலட்சம் ‘டோஸ்’ கொரோனா தடுப்பு மருந்தை ஏற்றுமதி செய்துள்ளதாக ஐ.நா. சபையில் இந்தியா தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் நடந்த கருத்தரங்கில் ஐ.நா.இவுக்கான இந்தியாவின் நிரந்தர துணை துாதர் கே.நாகராஜ் நாயுடு மேற்படி தெரிவித்துள்ளார்.
இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “ உலகிலேயே அதிகளவில் தடுப்பூசி உற்பத்தி செய்யும் நாடாக இந்தியா உள்ளது. எங்களின் தடுப்பு மருந்துகளை உலக மக்கள் அனைவருக்கும் வழங்க இந்தியா கடமைப்பட்டுள்ளது.
கொரோனாவுக்கு எதிராக இந்தியா தயாரித்துள்ள இரண்டு தடுப்பு மருந்துகளும் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இதுவரை ஒன்பது நாடுகளுக்கு 60 இலட்சம் டோஸ் கொரோனா தடுப்பு மருந்தை இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது.
சில நாடுகளுடன் சேர்ந்து தடுப்பு மருந்தை தயாரிப்பதற்கான ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் தடுப்பு மருந்துகளின் பயன்பாடு பாதுகாப்பு பற்றி அண்டை நாடுகளுக்கு இந்தியா பயிற்சியளித்துள்ளது.
கொரோனா பரவல் காலத்தில் 150க்கும் அதிகமான நாடுகளுக்கு, இந்தியா மருத்துவ உதவிகளை செய்துள்ளது. பூட்டான், நேபாளம், பங்களாதேஷ் மாலைத்தீவு, மியன்மார் உட்பட அண்டை நாடுகளுக்கு கொரோனா தடுப்பு மருந்தை இந்தியா இலவசமாக வழங்கியுள்ளது.
ஐ.நா.வின் அமைதிப்படைக்கு அதிக வீரர்களை அனுப்பியுள்ளது இந்தியா தான். கொரோனா பரவலின் போது அமைதிப்படை வீரர்கள் சிறப்பாக பணியாற்றினர்.
அதனால் அமைதிப்படை வீரர்கள் ஐ.நா. மனிதநேய ஊழியர்கள் ஐ.நா. முன்களப் பணியாளர்கள் ஆகியோருக்கு முக்கியத்துவம் கொடுத்து முதல்கட்டமாக தடுப்பூசி போட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
3 Days agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
3 Days agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
3 Days agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
3 Days agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
3 Days agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
3 Days agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
6 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
6 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1481 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1481 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1481 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1481 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1481 Days ago