மூன்றாம் நாள் ஆட்டம் நிறைவு: 9 விக்கெட்களை இழந்தது இங்கிலாந்து !
Jan 25, 2021 224 views Posted By : YarlSri TV
மூன்றாம் நாள் ஆட்டம் நிறைவு: 9 விக்கெட்களை இழந்தது இங்கிலாந்து !
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.
அதன்படி இன்றைய ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 9 விக்கெட்களை இழந்து 339 ஓட்டங்களை பெற்றுக்கொண்டுள்ளது.
அவ்வணி சார்பாக சிறப்பாக விளையாடிய அணித் தலைவர் ஜோ ரூட் 186 ஓட்டங்களை பெற்ற நிலையில் டில்ருவான் பெரேராவின் பந்துவீச்சில் அட்டமிழந்து வெளியேற மூன்றாம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்தது.
மேலும் அவ்வணி சார்பாக ஜோஸ் பட்லர் 55 ஓட்டங்களையும் டொம்னினிக் பேஸ் 32 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
பந்துவீச்சில் இலங்கை அணி சார்பாக லசித் எம்புல்தெனிய 7 விக்கெட்களை வீழ்த்த டில்ருவான் பெரேரா மற்றும் ரமேஷ் மெண்டிஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினை வீழ்த்தினர்.
42 பின்னிலையில் மேலும் ஒரு விக்கெட் கைவசம் இருக்க இங்கிலாந்து அணி நாளை தொடர்ந்தும் துடுப்பெடுத்தாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1490 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1490 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1490 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1490 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1490 Days ago