கொரோனாவால் மரணிப்பவர்களின் சடலங்களை தகனம் செய்தல் – இலங்கையிடம் ஐ.நா. முன்வைத்துள்ள கோரிக்கை
Jan 26, 2021 195 views Posted By : YarlSri TV
கொரோனாவால் மரணிப்பவர்களின் சடலங்களை தகனம் செய்தல் – இலங்கையிடம் ஐ.நா. முன்வைத்துள்ள கோரிக்கை
கொரோனா வைரஸினால் உயிரிழப்பவர்களின் சடலங்களை கட்டாயமாக தகனம் செய்ய வேண்டும் என்ற இலங்கை அரசாங்கத்தின் தீர்மானத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தியுள்ளது.
குறித்த செயற்பாடு நாட்டிலுள்ள முஸ்லிம் மற்றும் சிறுபான்மையினரின் நம்பிக்கைகளுக்கு முரணானது எனவும் அந்த சபை சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த விடயம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
குறித்த அறிக்கையில், கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட அல்லது தொற்று உறுதியானதாக சந்தேகிக்கப்படும் சடலங்களை கையாள்வதற்கான ஒரே வழியாக தகனம் செய்யப்படுவது மனித உரிமை மீறல் செயற்பாடுகளுக்கு சமமானதெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை மற்றும் ஏனைய நாடுகளில் கொரோனாவால் மரணிப்போரின் சடலங்களை அடக்கம் செய்வதனால் தொற்று பரவுவதற்கான ஆதாரங்கள் எவையும் வெளிப்படவில்லை என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கொரோனா பரவலைக் கட்டுபடுத்துவதற்கு பொதுவான சுகாதார நடைமுறைகளை கடுமையாக பின்பற்றுகின்ற போதிலும் கொரோனா காரணமாக மரணிப்பவர்களுக்கு கௌரவமளிக்க வேண்டும் எனவும் இலங்கையை அந்த சபை வலியுறுத்தியுள்ளது.
அதேவேளை, அவர்களின் மரபு, கலாசாரம் மற்றும் நம்பிக்கை என்பவற்றிற்கு மதிப்பளிக்க வேண்டும் எனவும் ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர்குழு வலியுறுத்தியுள்ளது.
சில சுவாரஸ்யமான செய்திகள்
யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
3 Days agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
3 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
3 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1477 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1477 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1477 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1478 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1478 Days ago