Skip to main content

ஜேர்மனியில் ஜனவரி 31ஆம் திகதி வரை முடக்கம் நீடிப்பு

Jan 06, 2021 222 views Posted By : YarlSri TV
Image

ஜேர்மனியில் ஜனவரி 31ஆம் திகதி வரை முடக்கம் நீடிப்பு 

ஜேர்மனியில் அமுல்படுத்தப்பட்டுள்ள பொது முடக்கம் ஜனவரி 31ஆம் திகதி வரை நீட்டிக்கப்படுகிறது என அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.



கொரோனா வைரஸால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட ஐரோப்பிய நாடுகளில் ஜேர்மனியும் ஒன்று. அங்கு கொரோனா வைரசின் 2ஆவது அலை வேகமாக பரவி வருகிறது.



இதனிடையே வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கொரோனா கட்டுப்பாடுகளை தீவிரமாக்குவது குறித்து அரசாங்கம் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வந்தது.



இதனையடுத்து ஜனவரி 10ஆம் திகதி வரை அமுலில் உள்ள நாடளாவிய முடக்கத்தை, ஜனவரி 31ஆம் திகதி வரை நீட்டிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.



கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் முடக்கத்தை மிகவும் கடுமையாக கடைப்பிடிக்க அரசு முடிவு செய்துள்ளது என ஜேர்மன் ஜனாதிபதி ஏஞ்சலா மெர்கல் அறிவித்துள்ளார்.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

7 Hours ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

3 Days ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

3 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை