டெல்லியில் கொரோனா தடுப்பூசி போடுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன - முதல்-மந்திரி கெஜ்ரிவால்
Jan 15, 2021 308 views Posted By : YarlSri TV
டெல்லியில் கொரோனா தடுப்பூசி போடுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன - முதல்-மந்திரி கெஜ்ரிவால்
நாடு முழுவதும் நாளை மறுநாள் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்க உள்ளது. இதற்காக அனைத்து மாநிலங்களுக்கும் தடுப்பூசி மருந்துகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. முதற்கட்டமாக கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது. தடுப்பூசி போடுவதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெறுகின்றன.
இந்நிலையில், டெல்லியில் தடுப்பூசி போடுவதற்கான ஏற்பாடுகள் குறித்து அம்மாநில முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது:-
டெல்லியில் கொரோனா தடுப்பூசி போடுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. மத்திய அரசிடம் இருந்து 2.74 லட்சம் டோஸ்கள் தடுப்பூசி மருந்து வந்துள்ளது. இதில் 1.2 லட்சம் டோஸ்கள், சுகாதாரப் பணியாளர்களுக்கு செலுத்துவற்கு பயன்படுத்தப்படும். 2.4 லட்சம் வரையிலான சுகாதாரப் பணியாளர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள பதிவு செய்துள்ளனர்.
முதலில் 81 மையங்களில் தடுப்பூசி போடும் பணி நடைபெறும். அதன்பின்னர் படிப்படியாக 175 மையங்களாகவும் பின்னர் 1,000 மையங்களாகவும் அதிகரிக்கப்படும். இந்த மையங்கள் ஒவ்வொன்றிலும் 100 தடுப்பூசிகள் வரை வழங்கப்படும்.
தடுப்பூசி போடும் பணி ஒரு வாரத்தில் நான்கு நாட்களில் நடைபெறும். திங்கள், செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமையில் தடுப்பூசி போடப்படும். மற்ற நாட்கள், பிற நோய்களுக்கான தடுப்பூசிகள் செலுத்துவதற்காக ஒதுக்கப்படும். கொரோனா தடுப்பூசி திட்டம் காரணமாக பிற நோய்களுக்கான தடுப்பூசி அட்டவணைகள் பாதிக்கப்படுவதை நாங்கள் விரும்பவில்லை.
நமது தேவைக்கேற்ப அதிகமான தடுப்பூசிகள் கிடைக்கும் என்று நம்புகிறோம். ஒரு வருடமாக மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். தடுப்பூசி வருகையால், நிவாரணம் கிடைக்கும் என்று நம்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1492 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1492 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1492 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1493 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1493 Days ago