11 நாட்டு பிரஜைகளுக்கு ஜப்பானுக்குள் பிரவேசிக்க தடை!
Jan 14, 2021 250 views Posted By : YarlSri TV
11 நாட்டு பிரஜைகளுக்கு ஜப்பானுக்குள் பிரவேசிக்க தடை!
இலங்கை உட்பட ஆசிய பிராந்தியத்தில் உள்ள 11 நாடுகளின் பிரஜைகளுக்கு இன்று (14) முதல் ஜப்பானுக்குள் பிரவேசிக்க அந்த நாடு தடை விதித்துள்ளது.
கொரோனா அச்சுறுத்தலை கருத்தில் கொண்டு நாட்டின் எல்லைக் கொள்கைகள் மாற்றி விரிவாக்கப்பட்டதை அடுத்தே இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அங்கு டோக்கியோ, ஒசாகா உள்ளிட்ட பல நகரங்களில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
அதேபோல் நள்ளிரவு முதல் அந்த நாட்டின் மேலும் பல நகரங்களும் முடக்கப்படுள்ளன.
இலங்கை, தைவான், தாய்லாந்து, ஹொங்கொங், சிங்கப்பூர், மலேசியா, வியட்நாம், தென் கொரியா மற்றும் சீனா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களும் ஜப்பானுக்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
எனினும் இந்த தடை ஜனவரி 31 வரை வியாபார பயணிகளுக்கு அமுலாகாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜப்பானில் கொரோனா நோய்த்தொற்றாளர்களின் எண்ணிக்கை மூன்று இலட்சத்திற்கும் அதிகம் என்பதோடு நான்காயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1492 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1492 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1492 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1493 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1493 Days ago