Skip to main content

விவசாயிகளின் போராட்டத்தை மத்திய அரசால் முடக்க முடியாது – அரவிந்த் கேஜ்ரிவால்!

Dec 21, 2020 221 views Posted By : YarlSri TV
Image

விவசாயிகளின் போராட்டத்தை மத்திய அரசால் முடக்க முடியாது – அரவிந்த் கேஜ்ரிவால்! 

விவசாயிகளுக்கு ஆதரவளிப்பவா்கள் எதிராக வருமான வரித் துறையை பயன்படுத்தி விவசாயிகளின் போராட்டத்தை மத்திய அரசால் முடக்க முடியாது என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளாா்.



இது குறித்து தனது ருவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள அவர், “விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து வரும் வணிகா்களுக்கு எதிராக வருமான வரித் துறை பயன்படுத்தப்படுகிறது.



வணிகா்களை இவ்வாறு துன்புறுத்துவது அநீதியானது. விவசாயிகள் போராட்டத்தை நலிவடையச் செய்யும் வகையில்  மத்திய அரசு இதைத் திட்டமிட்டு செய்கிறது.



விவசாயிகள் போராட்டத்தை மத்திய அரசால் முடக்க முடியாது. இன்று முழு நாடுமே விவசாயிகள் பக்கம் உள்ளது. அப்படியிருக்கும் போது இன்னும் எத்தனை போ் மீது மத்திய அரசு வருமான வரித் துறையை ஏவிவிடும்” எனத் தெரிவித்துள்ளார்.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை