நாட்டை துண்டாட முயற்சிக்கும் குழுக்கள் மீது மோடி அரசு நடவடிக்கை எடுக்கும் -ரவிசங்கர் பிரசாத் எச்சரிக்கை!
Dec 14, 2020 243 views Posted By : YarlSri TV
நாட்டை துண்டாட முயற்சிக்கும் குழுக்கள் மீது மோடி அரசு நடவடிக்கை எடுக்கும் -ரவிசங்கர் பிரசாத் எச்சரிக்கை!
விவசாயிகள் போராட்டத்தை சாதகமாக பயன்படுத்தி நாட்டை துண்டாட முயற்சிக்கும் குழுக்கள் மீது மோடி அரசு கடும் நடவடிக்கை எடுக்கும் என மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
விவசாயிகள் போராட்டத்தில் மாவோயிஸ்டுகள் ஊடுருவி இருப்பதாக மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் கூறியுள்ள நிலையல், பா.ஜ.க சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த ரவிசங்கர் பிரசாத் மேற்படி கூறியுள்ளார்.
இதன்போது மேலும் தெரிவித்த அவர், “வேளாண் சட்டங்களை மீளப்பெறும்வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என்று போராட்டக்காரர்கள் கூறுகிறார்கள்.
மோடி அரசு விவசாயிகளை மதிக்கிறது. அதே சமயத்தில் விவசாயிகள் போராட்டத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த பார்க்கும் குழுக்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்.
நாட்டை துண்டாட வேண்டும் என்று பேசும் இவர்கள் யார் என்று கேட்க விரும்புகிறேன். டெல்லியிலும் மராட்டியத்திலும் கலவரத்தில் ஈடுபட்டதற்காக சிறையில் இருக்கும் அறிவுஜீவிகளை விடுதலை செய்யுமாறு இவர்கள் கோருகிறார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1473 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1473 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1473 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1473 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1474 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1474 Days ago