Skip to main content

நாட்டை துண்டாட முயற்சிக்கும் குழுக்கள் மீது மோடி அரசு நடவடிக்கை எடுக்கும் -ரவிசங்கர் பிரசாத் எச்சரிக்கை!

Dec 14, 2020 243 views Posted By : YarlSri TV
Image

நாட்டை துண்டாட முயற்சிக்கும் குழுக்கள் மீது மோடி அரசு நடவடிக்கை எடுக்கும் -ரவிசங்கர் பிரசாத் எச்சரிக்கை! 

விவசாயிகள் போராட்டத்தை சாதகமாக பயன்படுத்தி நாட்டை துண்டாட முயற்சிக்கும் குழுக்கள் மீது மோடி அரசு கடும் நடவடிக்கை எடுக்கும் என மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.



விவசாயிகள் போராட்டத்தில் மாவோயிஸ்டுகள் ஊடுருவி இருப்பதாக மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் கூறியுள்ள நிலையல், பா.ஜ.க சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த ரவிசங்கர் பிரசாத் மேற்படி கூறியுள்ளார்.



இதன்போது மேலும் தெரிவித்த அவர்,  “வேளாண் சட்டங்களை மீளப்பெறும்வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என்று போராட்டக்காரர்கள் கூறுகிறார்கள்.



மோடி அரசு  விவசாயிகளை மதிக்கிறது. அதே சமயத்தில்  விவசாயிகள் போராட்டத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த பார்க்கும் குழுக்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்.



நாட்டை துண்டாட வேண்டும் என்று பேசும் இவர்கள் யார் என்று கேட்க விரும்புகிறேன். டெல்லியிலும் மராட்டியத்திலும் கலவரத்தில் ஈடுபட்டதற்காக சிறையில் இருக்கும் அறிவுஜீவிகளை விடுதலை செய்யுமாறு இவர்கள் கோருகிறார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை