Skip to main content

அவசர பயன்பாட்டுக்கு மொடர்னா தடுப்பூசியை பயன்படுத்த அமெரிக்க அரசாங்கம் அனுமதி!

Dec 19, 2020 217 views Posted By : YarlSri TV
Image

அவசர பயன்பாட்டுக்கு மொடர்னா தடுப்பூசியை பயன்படுத்த அமெரிக்க அரசாங்கம் அனுமதி! 

அவசர பயன்பாட்டு அடிப்படையில் மொடர்னா நிறுவனம் தயாரிக்கும் தடுப்பூசிக்கு அமெரிக்க அரசாங்கம் அனுமதியளித்துள்ளது.



இதன்படி நாட்டின் இரண்டாவது கொரோனா வைரஸ் தடுப்பூசியாக மொடர்னா அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அரசாங்கம் தெரிவித்துள்ளது.



குறித்த தடுப்பூசிக்கு அனுமதி வழங்குமாறு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்திற்கு ஆலோசனை வழங்கும் மருத்துவ நிபுணர்கள் குழுவினால் பரிந்துரை முன்வைக்கப்பட்டிருந்தது.



இதனை அடுத்து ஆலோசனைக் குழுவின் பரிந்துரையைத் தொடர்ந்து நேற்று வெள்ளிக்கிழமை அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.



அதன்படி 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு மொடர்னா தடுப்பூசியை செலுத்த அனுமதிப்பதாக குறித்த டுவிட்டர் பதிவில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.



ஏற்கனவே அவசர பயன்பாட்டின் அடிப்படையில் பைசர் மற்றும் பயோஎன்டெக் தடுப்புசிக்கு அனுமதியளித்து ஒருவார காலபகுதியின் பின்னர் மொடர்னா தடுப்பூசிக்கு அமெரிக்க அரசாங்கம் அனுமதியளித்துள்ளது.



இதேவேளை 2021 ஆம் ஆண்டின் முதல் காலாண்டு பகுதிக்குள் 200 மில்லியன் கொரோனா தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வதற்கு அமெரிக்கா தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

4 Hours ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

3 Days ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

3 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை