Skip to main content

பனாமாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் இரண்டு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

Dec 18, 2020 226 views Posted By : YarlSri TV
Image

பனாமாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் இரண்டு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு! 

மத்திய அமெரிக்க நாடுகளில் ஒன்றான பனாமாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், இரண்டு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.



அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, பனாமாவில் இரண்டு இலட்சத்து மூவாயிரத்து 295பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.



உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 42ஆவது நாடாக விளங்கும் பனாமாவில் இதுவரை வைரஸ் தொற்றினால் மூவாயிரத்து 481பேர் உயிரிழந்துள்ளனர்.



கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், மூவாயிரத்து 348பேர் பாதிக்கப்பட்டதோடு 42பேர் உயிரிழந்துள்ளனர்.



தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 31ஆயிரத்து 576பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 183பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.



அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து ஒரு இலட்சத்து 68ஆயிரத்து 238பேர் மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் என்ன ஆனார்கள்?...

2 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை