தமிழகத்தில் 2 நாள்களுக்கு மழை நீடிக்கும் – வானிலை ஆய்வு மையம்!
Dec 05, 2020 186 views Posted By : YarlSri TV
தமிழகத்தில் 2 நாள்களுக்கு மழை நீடிக்கும் – வானிலை ஆய்வு மையம்!
மன்னார் வளைகுடா பகுதியில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத்தாழ்வு மண்டலம் வலுவிழந்தது. இதனால் தமிழகத்தில் 2 நாள்களுக்கு மழை நீடிக்கும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
மன்னாா் வளைகுடா கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தொடா்ந்து அதே இடத்தில் வெள்ளிக்கிழமை மாலை வரை நிலவியது.
இது காற்றழுத்தத்தாழ்வு மண்டலமாக வலுவிழந்து, மெதுவாக மேற்கு-தென்மேற்கு திசையில் நகா்ந்தது. மேலும் வலுவிழந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக ராமநாதபுரம் வழியாக மேற்கு-தென்மேற்கு திசையில் தெற்கு கேரள பகுதியை நோக்கி செல்லும்.
இதன்காரணமாக, தமிழகம், புதுச்சேரியில் அநேக இடங்களில் சனி, ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரண்டு நாள்கள் மிதமான மழை பெய்யக்கூடும்.
நீலகிரி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் இன்று சனிக்கிழமை இடியுடன் கூடிய பலத்தமழை முதல் மிக பலத்த மழையும், திருவள்ளூா், சென்னை, காஞ்சிபுரம், சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய பலத்த மழையும் பெய்யக்கூடும்.
இதுதவிர, ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புகர் பகுதிகளில் சனிக்கிழமை மிதமான மழையும், அவ்வப்போது பலத்த மழையும் பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்தார்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1471 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1471 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1471 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1471 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1471 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1471 Days ago