ஜெயலலிதாவின் 4 ஆம் ஆண்டு நினைவேந்தல்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அஞ்சலி!
Dec 05, 2020 220 views Posted By : YarlSri TV
ஜெயலலிதாவின் 4 ஆம் ஆண்டு நினைவேந்தல்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அஞ்சலி!
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 4ஆம் ஆண்டு நினைவேந்தல் தமிழக மக்களினால் இன்று (சனிக்கிழமை) நினைவு கூரப்படுகின்றது.
ஆனால் இம்முறை கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வீடுகளிலேயே விளக்கேற்றி, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்துமாறு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஜெயலலிதாவின் 4ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை மெரினாவிலுள்ள நினைவிடத்தில் மலர்தூவி, அஞ்சலி செலுத்திய பின் அவர் இவ்வாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும், அ.தி.மு.க.நிர்வாகிகளும் தொண்டர்களும் தமது இல்லங்களில் விளக்கு ஏற்றி வைத்து, அவரது திருவுருவப் படத்தின் முன் அன்போடு வணங்க வேண்டும் எனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை ஜெயலலிதாவின் நினைவு தினத்தை முன்னிட்டு, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் உறுதி மொழி வாசிக்க, மெரினா நினைவிடத்திற்கு வருகை தந்திருந்த கட்சியினர் அதை திரும்ப கூறினர்.
இயற்கை பேரிடர் நேரங்களில் சுற்றிச் சுழன்று அல்லும் பகலும் அயராது பாடுபட்டவர் ஜெயலலிதா, அவர் காட்டிய வழியில் பல்வேறு இயற்கை பேரிடர் நேரங்களில் மக்களுக்காக தமிழக அரசு பணியாற்றுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1490 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1490 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1490 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1491 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1491 Days ago