வெள்ள வாய்காலை மூடியமையினாலேயே வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்துள்ளது!
Dec 05, 2020 258 views Posted By : YarlSri TV
வெள்ள வாய்காலை மூடியமையினாலேயே வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்துள்ளது!
யாழ்ப்பாணம் மாநகர சபைக்குட்பட்ட கந்தர்மடம், இலுப்பையடிச் சந்திப்பகுதியிலுள்ள வெள்ள வாய்காலை மூடி வீதி அமைக்கப்பட்டதனால், இன்று (சனிக்கிழமை) அதிகாலை தொடர்சியாகப் பெய்த கடும் மழை காரணமாக வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்து, மக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியிருக்கின்றனர்.
மேலும், வீடுகளின் பெரும் பகுதி வெள்ளத்தில் மூழ்கியிருக்கிறது. இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரியப்படுத்திய போதிலும், எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை எனவும் அப்பகுதி மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
இதேவேளை யாழ்ப்பாணம் பேருந்து நிலையம் மற்றும் அதனை சூழவுள்ள பகுதிகளும் வெள்ளத்தால் மூழ்கியுள்ளன.
யாழ்ப்பாண மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக 17 ஆயிரத்து 243 குடும்பங்களை சேர்ந்த 57ஆயிரத்து 513 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட அனர்த்த முகாமைத்து பிரிவின் உதவி பணிப்பாளர் ரீ.என்.சூரியராஜா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
சில சுவாரஸ்யமான செய்திகள்
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1492 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1492 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1492 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1492 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1492 Days ago