Skip to main content

முழுஅடைப்பு போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்- பசவராஜ் பொம்மை!

Dec 05, 2020 252 views Posted By : YarlSri TV
Image

முழுஅடைப்பு போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்- பசவராஜ் பொம்மை! 

கர்நாடகத்தில் முழுஅடைப்பு போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் பசவராஜ் பொம்மை  எச்சரிக்கை விடுத்துள்ளார்.



தட்சிண கன்னடா- மங்களூர்,பனம்பூர் பகுதியில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.



குறித்த நிகழ்வில் பசவராஜ் பொம்மை மேலும் கூறியுள்ளதாவது, “கடந்த 10 மாதங்களாக மாநிலத்தில் குற்றச் சம்பவங்கள் ஓரளவு குறைந்திருந்தாலும், சைபர் கிரைம் குற்றங்கள் அதிகரித்துள்ளன.



குறிப்பாக சைபர் கிரைம் மூலம் வங்கி மோசடி சம்பந்தமான முறைப்பாடுகள் அதிக அளவில் கிடைக்கப்பெற்றுள்ளன.



எனவே, மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். மக்கள் ஏமாற கூடாது. போதைப்பொருள் நடமாட்டத்தை தடுக்க பொலிஸார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.



மாநகரில் குற்றச் சம்பவங்களை தடுக்க புதியதாக 1,200 இடங்களில் கண்காணிப்பு கமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அவை பொலிஸ் ஊடாக  கண்காணிக்கப்படும்.



மாநிலத்தில் பொலிஸாருக்கு தேவையான வசதிகளை மாநில அரசு உடனுக்குடன் செய்து கொடுத்து வருகிறது. பொலிஸார் 24 மணி நேரமும் பணியில் இருப்பதால் அவர்களுக்கு தேவையான வீடு உள்ளிட்ட பல்வேறு வசதிகளை மாநில அரசு செய்து வருகிறது.



இதேவேளை மராட்டிய மேம்பாட்டு வாரியம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து எதிர்வரும் 5ஆம் திகதி,  மாநிலம் தழுவிய போராட்டத்திற்கு கன்னட கூட்டமைப்பு சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன.



ஆனாலும் போராட்டத்திற்கு அரசு அனுமதி வழங்கவில்லை. போராட்டத்தை நடத்துபவர்கள் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை