Skip to main content

நாட்டில் இன்று 517 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு- ஒருவர் உயிரிழப்பு!

Dec 05, 2020 226 views Posted By : YarlSri TV
Image

நாட்டில் இன்று 517 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு- ஒருவர் உயிரிழப்பு! 

நாட்டில் மேலும் 517 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.



இவ்வாறு, தொற்று கண்டறியப்பட்டவர்கள் அனைவரும் ஏற்கனவே தொற்று கண்டறியப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



இதன்படி, மினுவாங்கொட மற்றும் பேலியகொட மீன் சந்தை கொரோனா கொத்தணியில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 23 ஆயிரத்தைக் கடந்து 23 ஆயிரத்து ஐந்தாக அதிகரித்துள்ளது.



இந்நிலையில், நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 26ஆயிரத்து 559ஆக அதிகரித்துள்ளது.



இதேவேளை, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து இன்று 406 பேர் வீடுகளுக்குத் திரும்பியுள்ள நிலையில் இதுவரை 19 ஆயிரத்து 438 பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.



இந்நிலையில், இன்னும் ஏழாயிரத்து 231 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.



இதேவேளை, நாட்டில் இன்று ஒருவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்த நிலையில், இதுவரையான மொத்த உயிரிழப்பு 130ஆக அதிகரித்துள்ளது.



பிலியந்தலை பிரதேசத்தைச் சேர்ந்த 72 வயதுடைய ஆணொருவர் கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார்.



இவரது மரணத்திற்கான காரணம், கொரோனா நிமோனியாவால் அதிகரித்த பக்டீரியா தொற்று மற்றும் இதய நோய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை