லங்கன் பிரீமியர் லீக்: இன்று இரண்டு போட்டிகள்!
Dec 01, 2020 237 views Posted By : YarlSri TV
லங்கன் பிரீமியர் லீக்: இன்று இரண்டு போட்டிகள்!
இலங்கையில் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்றுவரும் லங்கன் பிரீமியர் லீக் ரி-20 தொடரில், இன்றைய தினம் இரண்டு லீக் போட்டிகள் நடைபெறவுள்ளன.
முதலில் மாலை 3.30 மணியளவில் நடைபெறும் தொடரின் ஏழாவது லீக் போட்டியில், கொழும்பு கிங்ஸ் அணியும் தம்புள்ளை வைக்கிங்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
ஹம்பாந்தோட்டை மைதானத்தில் நடைபெறவுள்ள இப்போட்டியில், கொழும்பு அணிக்கு அஞ்சலோ மத்தியூஸூம், தம்புள்ளை அணிக்கு தசுன் சானகவும் தலைமை தாங்கவுள்ளனர்.
புள்ளிப்பட்டியலை பொறுத்தவரை கொழும்பு அணி தான் விளையாடிய இரண்டு போட்டிகளிலுமே வெற்றிபெற்று 4 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. தம்புள்ளை அணிஇரண்டில் ஒன்றில் வெற்றிபெற்று 2 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் உள்ளது.
இரவு 8 மணிக்கு நடைபெறவுள்ள இரண்டாவது போட்டியில், கண்டி கிங்ஸ் அணியும், யாழ்ப்பாணம் ஸ்டாலியன்ஸ் அணியும் மோதவுள்ளன.
இப்போட்டியில் யாழ்ப்பாணம் அணிக்கு திசர பெரேராவும், கண்டி அணிக்கு குசல் ஜனித் பெரேராவும் தலைமை தாங்கவுள்ளனர்.
புள்ளிப் பட்டியலை பொறுத்தவரை யாழ்ப்பாணம் அணி, தான் விளையாடிய இரண்டு போட்டிகளிலுமே வெற்றிபெற்று 4 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. கண்டி அணி இரண்டில் ஒன்றில் வெற்றிபெற்று 2 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
5 Days agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
5 Days agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
5 Days agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
5 Days agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
5 Days agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
5 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1482 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1482 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1483 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1483 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1483 Days ago