பார்வையிட செல்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி!
Nov 25, 2020 229 views Posted By : YarlSri TV
பார்வையிட செல்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி!
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து விநாடிக்கு 1,000 கனஅடி நீர் திறக்கப்பட்டது.
சென்னை செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வினாடிக்கு ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. தொடர் மழையால் நீர் வரத்து அதிகரித்ததால் முன்னெச்சரிக்கையாக ஏரியில் இருந்து நீர் திறக்கப்பட்டது. செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்மட்டம் 28 அடி நெருங்கியதால் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக ஆயிரம் கன அடி நீர் திறக்கப்படும் நிலையில் சூழ்நிலையைப் பொறுத்து நீர் திறப்பு அதிகரிக்கப்படும். செம்பரம்பாக்கத்தில் மொத்தம் 19 மாதங்கள் உள்ள நிலையில் ஏழு மதகுகளில் இருந்து நீர் திறக்கப்பட்டுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரி தண்ணீர் வாய்க்கால் வழியாக அடையாற்றில் கலந்து கடலுக்கு செல்லும். 2015ஆம் ஆண்டு பெரு வெள்ளத்தின் போது திறக்கப்பட்ட நிலையில் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட்டுள்ளது .
இந்நிலையில் சென்னையில் புயல், மழை பாதிப்புகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று பார்வையிட உள்ளார்.பிற்பகல் 12 மணி அளவில் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் செம்பரம்பாக்கம் ஏரியை பார்வையிட முதல்வர் சென்றுள்ளார்.
வில்லிவாக்கம் உட்பட மேலும் சில பகுதிகளை முதல்வர் பார்வையிட இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ள நிலையில் நிவாரண முகாம்களையும் முதல்வர் பார்வையிட்டு ஆய்வு செய்கிறார்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1497 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1497 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1497 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1497 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1497 Days ago