அமெரிக்க அதிபர் பதவிக்கு தகுதி பெற்றுள்ள ஜோ பைடன் அரிசோனா மற்றும் ஜார்ஜியா மாநிலங்களையும் கைப்பற்றி கூடுதல் வாக்கு!
Nov 14, 2020 250 views Posted By : YarlSri TV
அமெரிக்க அதிபர் பதவிக்கு தகுதி பெற்றுள்ள ஜோ பைடன் அரிசோனா மற்றும் ஜார்ஜியா மாநிலங்களையும் கைப்பற்றி கூடுதல் வாக்கு!
அமெரிக்க அதிபர் பதவிக்கு தகுதி பெற்றுள்ள ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன், நேற்று அரிசோனா மற்றும் ஜார்ஜியா மாநிலங்களையும் வென்று உள்ளார். இதன்மூலம், அமெரிக்க தேர்தலின் இறுதி தேர்தல் சபை வாக்குகள் எண்ணிக்கையை பொருத்தவரை ஜனநாயகக் கட்சிக்கு கிடைத்த வாக்குகள் 306 ஆக உயர்ந்துள்ளது. வட கரோலினாவை வென்ற டொனால்டு டிரம்பின் குடியரசுக் கட்சிக்கான தேர்தல் சபை வாக்குகள் 232 ஆக உயர்ந்துள்ளது.
இந்த முடிவுகளை நியூயார்க் டைம்ஸ், சி.என்.என் மற்றும் பிற நெட்வொர்க்குகள் அறிவித்துள்ளன, இரண்டு இறுதி மாநிலங்களும் தேர்தல் தினத்திற்கு ஒன்றரை வாரங்களுக்குப் பிறகு தேர்தல் முடிவுகளை வெளியிட்டு உள்ளன.
ஜார்ஜியாவில் பைடனின் வெற்றி அவரது வாக்கு எண்ணிக்கையில் 16-ஐ கூடுதலாக சேர்த்தது, 2016 தேர்தல்களில் டொனால்ட் டிரம்ப் 306 தேர்தல் வாக்குகளைப் பெற்றபோது, அப்போதைய ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன் 232 வாக்குகளை வென்று இருந்தார்.
2016 இல் டிரம்ப் வென்ற ஜார்ஜியா, அரிசோனா, மிச்சிகன், பென்சில்வேனியா மற்றும் விஸ்கான்சின் ஆகிய ஐந்து மாநிலங்கள் இந்த ஆண்டு பைடனை நோக்கி திரும்பி உள்ளன.
சி.என்.என் அறிக்கையின்படி, நீண்ட இடைவெளிக்குபிறகு ஜோ பைடன் ஜார்ஜியாவில் வெற்றி பெற்ற முதல் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஆவார். கடைசியாக 1992 ஆம் ஆண்டில் பில் கிளிண்டன் வெற்றி பெற்று இருந்தார்.
சில சுவாரஸ்யமான செய்திகள்
யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
1 Days agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
1 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
1 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1476 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1476 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1476 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1476 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1476 Days ago