இடைத்தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெறும் என்று முதல் மந்திரி எடியூரப்பா நம்பிக்கை தெரிவித்துள்ளார்!
Nov 09, 2020 235 views Posted By : YarlSri TV
இடைத்தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெறும் என்று முதல் மந்திரி எடியூரப்பா நம்பிக்கை தெரிவித்துள்ளார்!
கர்நாடக சட்டசபையில் காலியாக உள்ள ஆர்.ஆர்.நகர், சிரா ஆகிய தொகுதிகளுக்கு கடந்த 3-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் ஆளும் பா.ஜ.க, காங்கிரஸ், ஜனதா தளம்(எஸ்) ஆகிய கட்சிகளுக்கு இடையே மும்முனை போட்டி நிலவியது.
இதில் பதிவான வாக்குகள் நாளை (செவ்வாய்க்கிழமை) எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படுகிறது. இதில் பா.ஜ.க. வெற்றி பெறும் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் தெரிவித்துள்ளன.
இந்நிலையில் இடைத்தேர்தல் நடைபெற்ற 2 தொகுதிகளிலும் பா.ஜ.க. வெற்றி பெறும் என்று முதல் மந்திரி எடியூரப்பா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:
இடைத்தேர்தல் நடைபெற்ற ஆர்.ஆர்.நகர், சிரா ஆகிய 2 தொகுதிகளிலும் பா.ஜ.க. வெற்றி பெறுவது உறுதி. ஆர்.ஆர்.நகரில் 35 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்திலும், சிராவில் 20 ஆயிரம் முதல் 25 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்திலும் பா.ஜ.க. வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. இதை நான் சொல்லவில்லை, இடைத்தேர்தலுக்கு முன்பும், தேர்தல் தினத்தன்றும் கூறினேன். நான் கூறிய இந்த கருத்தை காங்கிரஸ் மென்மையாக எடுத்துக் கொண்டது.
இடைத்தேர்தல் முடிவு வெளிவரும்போது, இதன் உண்மை நிலை அவர்களுக்கு தெரியவரும். காங்கிரஸ் வெற்றி பெறும் என்று சித்தராமையா கூறியுள்ளார். 10-ம் தேதி (நாளை) தேர்தல் முடிவு வெளிவரும்போது அவருக்கு யார் வெற்றி பெறுவார்கள் என்பது தெரியும். இருந்தாலும் அவருக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்தார்.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
20 Hours agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
20 Hours agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
20 Hours agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
20 Hours agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
20 Hours agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
20 Hours agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
4 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
4 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1479 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1479 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1479 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1479 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1479 Days ago