மியான்மரில் ஆங் சான் சூகியின் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கட்சி மீண்டும் வெற்றி பெறும்!
Nov 08, 2020 243 views Posted By : YarlSri TV
மியான்மரில் ஆங் சான் சூகியின் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கட்சி மீண்டும் வெற்றி பெறும்!
மியான்மர் நாட்டில் பல ஆண்டுகளாக ராணுவ ஆட்சி நடைபெற்று வந்த நிலையில், கடந்த 2015-ம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஆங் சான் சூகி அமோக வெற்றி பெற்றார்
எனினும், அரசியல் சாசன சிக்கல் காரணமாக அவரால் அதிபர் பதவியை ஏற்க முடியவில்லை. அதையடுத்து, புதிதாக உருவாக்கப்பட்ட அரசு தலைவர் பதவியை அவர் வகித்து வருகிறார்.
இந்த நிலையில் மியான்மர் நாடாளுமன்றத்தின் இரு அவைகளுக்குமான தேர்தல் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவுள்ளது. ராணுவத்துக்கு முன் ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகுதிகளைத் தவிர, மற்ற அனைத்து தொகுதிகளுக்கும் தேர்தல் நடக்கிறது.
இந்த தேர்தலில், தற்போதைய அரசின் தலைவர் ஆங் சான் சூகியின் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கட்சி மீண்டும் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும், ஆட்சியில் ராணுவத்தின் ஆதிக்கத்தைக் குறைத்து ஜனநாயகத்தை மேம்படுத்த அவர் தவறியதாக கருத்து நிலவுகிறது. எனவே, கடந்த தேர்தலில் பெற்ற அளவுக்கு ஆங் சான் சூகிக்கு இந்தத் தேர்தலில் அமோக ஆதரவு கிடைக்காது என்று கூறப்படுகிறது.
இந்தத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கட்சியை எதிர்த்து, தான் டே தலைமையிலான ஐக்கிய ஒற்றுமை மற்றும் மேம்பாட்டு கட்சி போட்டியிடுகிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1471 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1471 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1471 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1471 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1472 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1472 Days ago