Skip to main content

கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு மினி லாரியில் கடத்திவரப்பட்ட 8 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல்!

Nov 09, 2020 265 views Posted By : YarlSri TV
Image

கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு மினி லாரியில் கடத்திவரப்பட்ட 8 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல்! 

கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு மினி லாரியில் கடத்திவரப்பட்ட 8 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.



கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி அருகே தமிழக – கர்நாடக மாநில எல்லையில் உள்ள நேரலகிரி சோதனைச்சாவடி போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.



அப்போது, கர்நாடகத்தில் இருந்து தமிழகம் நோக்கி மினி லாரியை ஓட்டி வந்த நபர், போலீசாரை கண்டதும், சாலையிலேயே மினி லாரியை நிறுத்திவிட்டு தப்பியோடினார். இதனையடுத்து போலீசார் வாகனத்தை சோதனையிட்டபோது, அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா போதை0 பொருட்கள் இருப்பது தெரியவந்தது. இதன் மதிப்பு சுமார் 8 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் ஆகும். இதையடுத்து குட்கா போதைப் பொருட்கள் மற்றும் வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தப்பிஓடிய ஓட்டுநரை தேடி வருகின்றன


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை