கோனி என பெயரிடப்பட்ட புயல் பிலிப்பைன்சின் கிழக்கு பிராந்தியங்களை கடுமையாக உலுக்கியது!
Nov 02, 2020 312 views Posted By : YarlSri TV
கோனி என பெயரிடப்பட்ட புயல் பிலிப்பைன்சின் கிழக்கு பிராந்தியங்களை கடுமையாக உலுக்கியது!
பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள கலாபார்ஷன், மிமரோபா, விசயாஸ் ஆகிய பிராந்தியங்களை ‘மோலேவ்’ என்கிற சக்தி வாய்ந்த புயல் கடந்த செவ்வாய்க்கிழமை தாக்கியது. இந்தப் புயல் அங்கு கடும் சேதங்களை ஏற்படுத்தியது. புயல் காரணமாக 22 பேர் உயிரிழந்த நிலையில், லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர்.
இந்த பாதிப்பில் இருந்து மீள்வதற்குள் பிலிப்பைன்சை நேற்று மேலும் ஒரு சக்தி வாய்ந்த புயல் தாக்கியது. கோனி என பெயரிடப்பட்ட அந்த புயல் பிலிப்பைன்சின் கிழக்கு பிராந்தியங்களை கடுமையாக உலுக்கியது. கேடண்டுவானஸ் மாகாணத்தில் இந்தப் புயல் கரையை கடந்தபோது மணிக்கு 225 கி.மீ. வேகத்தில் தொடங்கி 280 கி.மீ. வேகம் வரை சூறாவளி காற்று சுழன்றடித்தது. இதில் நூற்றுக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின் கம்பங்களும் சரிந்தன. வீட்டின் மேற்கூரைகள் தூக்கி வீசப்பட்டன.
புயலை தொடர்ந்து பேய் மழை கொட்டித் தீர்த்தது. இதனால் நீர் நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஊர்களுக்குள் தண்ணீர் புகுந்தது. நூற்றுக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. பிலிப்பைன்சை இந்தாண்டு தாக்கிய புயல்களில் இது மிகவும் சக்தி வாய்ந்தது என்று கூறப்படுகிறது.
இந்த புயல் தொடர்பான சம்பவங்களில் இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் மாயமாகியுள்ளனர். மேலும் சுமார் 10 லட்சம் மக்கள் இந்த புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றும் பணிகள் நடந்து வருவதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1490 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1490 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1490 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1491 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1491 Days ago