Skip to main content

அமைச்சர் பசில் ராஜபக்சவை நாடாளுமன்றில் பார்ப்பதற்கு அரசாங்கம் விரும்புகின்றது - கெஹெலிய ரம்புக்வெல

Nov 06, 2020 257 views Posted By : YarlSri TV
Image

அமைச்சர் பசில் ராஜபக்சவை நாடாளுமன்றில் பார்ப்பதற்கு அரசாங்கம் விரும்புகின்றது - கெஹெலிய ரம்புக்வெல  

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவை நாடாளுமன்றில் பார்ப்பதற்கு அரசாங்கம் விரும்புகின்றது என ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.



பொதுஜனபெரமுனவை தொடங்கியவர்களில் பசில் ராஜபக்சவும் ஒருவர் அந்த கட்சி ஆரம்பிக்கப்பட்டமைக்கு அவரும் காரணம் என ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.



இதன்படி கட்சியை ஆரம்பித்து நான்குவருடங்களிற்குள் பசில் ராஜபக்ச ஒரு புரட்சியை ஏற்படுத்தினார் என அவர் தெரிவித்துள்ளார்.



நாங்கள் அவரை நாடாளுமன்றத்தில் பார்க்கவிரும்புகின்றோம் அவருக்கு உரிய கௌரவத்தை வழங்கவேண்டும் என ரம்புக்வெல குறிப்பிட்டுள்ளார்.



மேலும் ,பசில் ராஜபக்ச நாடாளுமன்றத்தில் இடம்பெறுவதை உறுதி செய்வதற்காகவே 20வது திருத்தம் கொண்டுவரப்பட்டதுஎனவும் ஊடகங்கள் சில செய்தி வெளியிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது



 


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை