Skip to main content

சென்னை ஆவடியில் பால் விற்பனையகம் உட்பட இரண்டு இடங்களில் மர்மநபர்கள் அடுத்தடுத்து கொள்ளை!

Oct 26, 2020 221 views Posted By : YarlSri TV
Image

சென்னை ஆவடியில் பால் விற்பனையகம் உட்பட இரண்டு இடங்களில் மர்மநபர்கள் அடுத்தடுத்து கொள்ளை! 

சென்னை ஆவடியில் பால் விற்பனையகம் உட்பட இரண்டு இடங்களில் மர்மநபர்கள் அடுத்தடுத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆவடியை சேர்ந்தவர் பெலிக்ஸ் (29).‌ இவர் அதே பகுதியில் உள்ள கன்னிகாபுரம், காந்தி தெருவில் பால் விற்பனை கடை நடத்தி வருகிறார்.

இந்நிலையில், பெலிக்ஸ் நேற்றிரவு விற்பனை முடிந்து கடையை பூட்டிச்சென்ற



நிலையில், இன்று காலை வழக்கம்போல் கடையை திறக்கச்சென்றுள்ளார். அப்போது பூட்டு உடைக்கப்பட்டு கடையில் இருந்த 800 ரூபாய் மதிப்பிலான ஐஸ்கிரீம்கள், பால் பவுடர் மற்றும் 2 ஆயிரம் ரூபாய் பணம் திருடு போனது தெரியவந்தது. இதேபோல் அந்த பகுதியில் உள்ள வீட்டுவசதி வாரிய



குடியிருப்பில் செயல்பட்டு வரும் தனியார் தொலைக்காட்சி ஆப்ரேட்டர் நிறுவனத்தின் கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள், அங்கிருந்த 5 மடிக்கணினிகள் மற்றும் ஒரு தொலைக்காட்சி பெட்டியை திருடி சென்றனர்.

இதுகுறித்து புகார்களின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற ஆவடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை