உலக அளவில் கொரோனா படிப்படியாக குறையும் கொரோனா உயிர் பலி!
Oct 30, 2020 256 views Posted By : YarlSri TV
உலக அளவில் கொரோனா படிப்படியாக குறையும் கொரோனா உயிர் பலி!
உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 4 கோடியே 51 லட்சமாக அதிகரித்துள்ளது. 11 லட்சத்து 80 ஆயிரம் பேர் உயிரிழக்க செய்த இந்த கொடிய வகை கொரோனா வைரசுக்கு இன்னும் முறையான மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. அதனால், அதிக அளவில் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. கொரோனா வைரஸ்கான தடுப்பூசிகளை கண்டுபிடிப்பதில் பல்வேறு நாடுகள் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றன.
இந்நிலையில் தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “வெளிநாடு மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்தவர்கள் உட்பட 2,608 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7 லட்சத்து 22 ஆயிரத்து 11 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 77,356 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம் பரிசோதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 98,85,443 அதிகரித்துள்ளது. இன்று பாதிக்கப்பட்டவர்களில் 1,568 பேர் ஆண்கள், 1,040 பேர் பெண்கள். 202 பரிசோதனை மையங்கள் தமிழகத்தில் உள்ளன.
இன்று மட்டும் 38 உயிரிழந்தனர். 17 பேர் தனியார் மருத்துவமனையிலும்,21 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 11,091 ஆக அதிகரித்துள்ளது. இன்று 3,924 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில் இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 6,87,388 ஆக அதிகரித்துள்ளது.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
சில சுவாரஸ்யமான செய்திகள்
-
நக்ரோடாவில் என்கவுண்டரில் கொல்லப்பட்ட 4 பயங்கரவாதிகள் இந்தியாவிற்குள் ஊடுருவிய சுரங்கப்பாதையை பாதுகாப்பு படையினர் கண்டுபிடித்தனர்!
-
தென் கொரியாவுடனான இராணுவ மற்றும் அரசியல் தொடர்புகளை துண்டித்து கொள்ளும் என வட கொரியா அரசு ஊடகம் தெரிவித்து உள்ளது.
-
சசிகலா, அபராத தொகை 10 கோடியை செலுத்த பெங்களூரு நகர சிவில் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்!
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1491 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1491 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1491 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1492 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1492 Days ago