சொகுசு கார் மோதி விபத்து 4 மாத குழந்தை பரிதாப மரணம்!
Oct 30, 2020 279 views Posted By : YarlSri TV
சொகுசு கார் மோதி விபத்து 4 மாத குழந்தை பரிதாப மரணம்!
நாகர்கோவில் அருகே டெம்போ மீது கார் மோதிய விபத்தில், 4 மாத குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை பகுதியில் வசித்து வரும் ஆலன் ஜோஸ் என்பவர், நேற்று தனது குடும்பத்துடன் வேளாங்கண்ணி மாதா கோயிலுக்கு சென்றுள்ளார். பின்னர், நேற்று மாலை அங்கிருந்து சொகுசு காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்துள்ளார். ஆபிரகாம் ஜெபசிங் என்பவர் காரை ஓட்டிக் கொண்டு வந்துள்ளார்.
இந்த நிலையில், நாகர்கோவில் அருகே உள்ள தோட்டியோடு பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த கார் எதிரே வந்த டெம்போ மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் காரில் இருந்த 9 பேர் படுகாயம் அடைந்த நிலையில், ஆலன் ஜோஸின் 4 மாத குழந்தை ஆட்லின் ரியா சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். தகவல் அறிந்து வந்த இரணியல் போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், ஜெபசிங் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1468 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1468 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1468 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1468 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1469 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1469 Days ago