கிண்டியில் திமுக ஆர்ப்பாட்டத்தின் போது பேசிய மு.க ஸ்டாலின், எதிர்க்கட்சி அரசியல் செய்யாமல் அவியலா செய்யும் என விமர்சித்துள்ளார்!
Oct 24, 2020 215 views Posted By : YarlSri TV
கிண்டியில் திமுக ஆர்ப்பாட்டத்தின் போது பேசிய மு.க ஸ்டாலின், எதிர்க்கட்சி அரசியல் செய்யாமல் அவியலா செய்யும் என விமர்சித்துள்ளார்!
மருத்துவ படிப்புக்கான 7.5% உள் ஒதுக்கீடு மசோதாவுக்கு ஆளுநர் விரைந்து ஒப்புதல் அளிக்கக்கோரி, சென்னை கிண்டியில் இருக்கும் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. அதில் டி.ஆர் பாலு, கனிமொழி, உதயநிதி, கே.என்.நேரு, பொன்முடி உள்ளிட்ட பல திமுக பிரமுகர்கள் பங்கேற்றுள்ளனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது பேசிய மு.க ஸ்டாலின், ” எதிர்க்கட்சி அரசியல் செய்யாமல் அவியலா செய்யும்?. அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% உள் ஒதுக்கேடு மசோதா நிறைவேறி 40 நாட்கள் ஆகியும் ஆளுநர் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை. மசோதாவுக்கு ஒப்புதல் தராமல் தாமதம் செய்தால் அதிமுக அரசு கைவிட்டு விடும் என ஆளுநர் நினைக்கிறார்” என்று கூறினார்.
மேலும், ஆளுநரை முதல்வர் கேள்வி கேட்காவிட்டாலும் நான் கேட்பேன் என்றும் கருணாநிதி, ஜெயலலிதா இருந்தவரை தமிழகத்தில் நீட் தேர்வு நுழைய முடியவில்லை என்றும் தெரிவித்தார்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1472 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1472 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1473 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1473 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1473 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1473 Days ago