சவேந்திர சில்வா நியமிக்கப்படுவதற்கு தானே காரணம் என்கிறார் எதிர்க்கட்சித் தலைவர்!
Oct 24, 2020 291 views Posted By : YarlSri TV
சவேந்திர சில்வா நியமிக்கப்படுவதற்கு தானே காரணம் என்கிறார் எதிர்க்கட்சித் தலைவர்!
நாட்டின் இராணுவத் தளபதியாக லெப். ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்படுவதற்கு பின்னணியில் இருந்தவனே இந்த சஜித் பிரேமதாஸ என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
எதிர்வரும் 28 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள அமெரிக்காவின் இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோவிடம் இராணுவத் தளபதி லெப் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு விதிக்கப்பட்டுள்ள அமெரிக்காவுக்கான பயணத்தடையை நீக்க வலியுறுத்த வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கோரிக்கை விடுத்தபோது, கடந்த அரசின் ஜெனிவா இணை அனுசரணை என்ற காட்டிக்கொடுப்பின் விளைவே இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு விதிக்கப்பட்டுள்ள அமெரிக்காவுக்கான பயணத்தடை என வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன பதிலளித்தார்.
இதன்போது சஜித் பிரேமதாஸ பின்வருமாறு பதிலளித்தார். அவர் தனது உரையில்,
“இலங்கையின் இராணுவத் தளபதியாக லெப். ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்படுவதற்கு பின்னணியில் இருந்தவன் இந்த சஜித் பிரேமதாஸ. இதனை நீங்கள் அப்போது ஜனாதிபதியாக இருந்த மைத்திரிபால சிறிசேனவிடம் கேட்கலாம். இப்போது இராணுவத் தளபதியாகவுள்ள சவேந்திர சில்வாவிடமும் கேட்கலாம்.
சவேந்திர சில்வாவை இராணுவத் தளபதியாக நியமிக்க வேண்டும் என்று அவரின் பெயரைப் பிரேரித்தேன். பெரும் அழுத்தம் கொடுத்தேன். இது உங்கள் யாருக்கும் இன்று வரை தெரியாது. அதனால்தான் இப்போதும் அவர் மீதான அமெரிக்காவுக்கான பயணத்தடையை நீக்க வேண்டும் எனக் கோருகின்றேன்” – என்றார்.
சில சுவாரஸ்யமான செய்திகள்
-
கொவிட் தடுப்பூசி தொடர்பான அதிர்ச்சித் தகவல்..!
-
நாட்டில் சர்வாதிகாரம் நடக்கிறது. தாழ்த்தப்பட்டோர் அதிகளவில் சித்ரவதைக்கு ஆளாகிறார்கள் என்று மம்தா பானர்ஜி ஆவேசமாக கூறினார்!
-
யாழ் மாவட்ட மக்கள் சமூக அக்கறையோடு செயற்படும்போது வெள்ள நிலைமையை கட்டுப்படுத்த முடியும் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்!
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1491 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1491 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1491 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1492 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1492 Days ago