Skip to main content

திருச்சி சுப்ரமணியபுரத்தில் மாவட்ட குழந்தைகள் நல காவலர்களுக்கான ஒருநாள் பயிற்சி முகாம்!

Oct 16, 2020 209 views Posted By : YarlSri TV
Image

திருச்சி சுப்ரமணியபுரத்தில் மாவட்ட குழந்தைகள் நல காவலர்களுக்கான ஒருநாள் பயிற்சி முகாம்! 

திருச்சி சுப்ரமணியபுரத்தில் மாவட்ட குழந்தைகள் நல காவலர்களுக்கான ஒருநாள் பயிற்சி முகாம், மத்திய மண்டல ஐ.ஜி ஜெயராம் தலைமையில் இன்று நடைபெற்றது.



அப்போது குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் சிறப்பாக செயல்பட்ட உறையூர் காவல் உதவி ஆய்வாளர் சோனியாகாந்தி உள்ளிட்ட காவலர்களுக்கு ஐ.ஜி ஜெயராமன் பாராட்டு சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்



திருச்சி சரகத்தில் குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற இடங்களாக 30 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும்,

அந்த இடங்களுக்கு நேரில் சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு, பாதுகாப்பான சூழலை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.



மேலும், போதிய ஆதாரங்கள் இல்லாமல் பாலியல் குற்றங்களில்

குற்றவாளிகள் வெளியே வருவதை தவிர்க்கும் வகையில் கூடுதலான ஆதாரங்களைத் திரட்டுவது, விசாரணை மேற்கொள்வது குறித்தும் காவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் திருச்சி மாநகர காவல் ஆணையர் லோகநாதன், திருச்சி சரக டிஐஜி ஆனிவிஜயா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் என்ன ஆனார்கள்?...

17 Hours ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை