நடிகை குஷ்பு மிகவும் சிந்திக்கக் கூடிய நபர் என பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்!
Oct 14, 2020 255 views Posted By : YarlSri TV
நடிகை குஷ்பு மிகவும் சிந்திக்கக் கூடிய நபர் என பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்!
திமுகவில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக நடிகை குஷ்பு காங்கிரசில் இணைந்து கொண்டார். அவருக்கு காங்கிரஸில் தேசிய செய்தித் தொடர்பாளர் பதவி வழங்கப்பட்டும், குஷ்பு கட்சியின் செயல்பாடுகளில் அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை. இதனைத் தொடர்ந்து கடந்த 2 நாட்களுக்கு முன்னர் டெல்லி சென்ற குஷ்பு, பாஜகவில் இணைந்து கொண்டார்.
குஷ்பு கட்சியில் இருந்த போதும் நடிகையாகவே இருந்ததாகவும் கட்சியின் கொள்கைகளுக்கு ஏற்றாற்போல செயல்படவில்லை என்றும் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி குற்றஞ்சாட்டினார். ஆனால், தான் கட்சியில் இருந்த வரை தனது கடைமையை சரியாக செய்தேன் என்றும் உயர் பதவிகளில் இருப்பவர்கள் தன்னை அடக்கி ஒடுக்கியதால் கட்சியில் இருந்து வெளியேறினேன் என்றும் குஷ்பு தெரிவித்தார். பாஜகவில் இணைந்த குஷ்வை, தமிழக பாஜகவினர் புகழ்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில் குஷ்பு பற்றி பேசிய பொன்.ராதாகிருஷ்ணன், குஷ்பு அரசியலில் சாதாரண நபர் இல்லை என்றும் ஆழ்ந்து சிந்திக்க கூடிய திறமை மிக்கவர் என்றும் கூறியுள்ளார். பாஜகவினர் குஷ்புவை புகழ்ந்து வரும் நிலையில், அவருக்கு கட்சியில் எந்த பதவி வழங்கப்படும் என்பது எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.
யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
3 Hours agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
3 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
3 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1478 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1478 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1478 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1478 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1478 Days ago