பெண் கொடுக்க மறுத்த தாய் வெட்டிக் கொலை – வீட்டு வாசலில் நிகழ்ந்த விபரீதம்!
Oct 08, 2020 238 views Posted By : YarlSri TV
பெண் கொடுக்க மறுத்த தாய் வெட்டிக் கொலை – வீட்டு வாசலில் நிகழ்ந்த விபரீதம்!
கோபிசெட்டிப்பாளையம் அருகே ஒரு தலை காதல் விவகாரத்தில் பெண்ணின் தாய் அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையத்தை அடுத்த பெரியமொடச்சூர் கிராமத்தை சேர்ந்த தமிழ்தாசன் என்பவரது மனைவி மேரி. இந்த தம்பதியருக்கு 5 மகள்கள் உள்ள நிலையில், கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்தாசன் உயிரிழந்தார்.
இந்நிலையில், நேற்று இரவு வீட்டிற்கு வந்த தனது இரண்டாவது மகள் அன்னமேரி மற்றும் அவரது கணவர் புஷ்பராஜுடன், மேரி வீட்டு வாசலில் நின்று பேசி கொண்டிருந்துள்ளார். அப்போது மோட்டார் சைக்கிளில் அங்கு வந்த மர்மநபர் ஒருவர், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் மேரியை சரமாரியாக வெட்டியுள்ளார். இதனை கண்டு தடுக்க முயன்ற அக்கம் பக்கத்தினரையும் அரிவாளால்
வெட்டிய அந்த நபர், அவ்வழியாக சென்ற ரவி என்பவரை தாக்கி இருசக்கர வாகனத்தை பறித்துக்கொண்டு தப்பியோடினார். இந்த சம்பவத்தில் மேரி மற்றும் பக்கத்து வீட்டை சேர்ந்த கணேசன் என்பவர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் இருவரையும் மீட்டு கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக கோவை மருத்துவக்கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்ட மேரி, அங்கு சிகிச்சை பலனின்றி மேரி உயிரிழந்தார்.
கணேசன் கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார். சம்பவம் நடைபெற்ற இடத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை நேரில் ஆய்வு செய்து, விசாரணை மேற்கொண்டனர். அப்போது, மேரியின் கடைசி மகளான 19 வயது இளம் பெண்னை, அந்தியூர் பர்கூர் பகுதியை சேர்ந்த 38 வயதான
லாரி ஓட்டுநர் முருகன் என்பவர் கடந்த ஐந்து ஆண்டுகளாக ஒருதலையாக காதலித்து வந்ததும், பெண் கேட்டு தர மறுத்ததால் மேரியை கொலை செய்யும் நோக்கதுடன் திட்டமிட்டு தாக்கியுள்ளதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. முருகன் விட்டுச்சென்ற இருசக்கர வாகத்தை பறிமுதல் செய்த கோபிசெட்டிபாளையம் போலீசார், தனிப்படைகள் அமைத்து கொலையாளி முருகனை தீவிரமாக தேடி வருகின்றனர்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1493 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1493 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1493 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1494 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1494 Days ago