கொரோனா எண்ணிக்கை அதிகரிப்பு - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்
Oct 06, 2020 214 views Posted By : YarlSri TV
கொரோனா எண்ணிக்கை அதிகரிப்பு - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்
வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து வந்த 3 லட்சம் நபர்களால் கொரோனா தொற்று 30 சதவீதம் அதிகரித்துள்ளதாக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை ஆவடியில் 14 தெருக்களில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதை பார்வையிட்டு ஆய்வு செய்த அமைச்சர், செய்தியாளர்களிடம் பேசுகையில்,
கொரோனா சிகிச்சை மையங்களில் எண்ணிக்கை அதிகரித்து வருவது கவலை தரும் விஷயம் என குறிப்பிட்டார். பல மையங்களில் ஆட்கள் இல்லாத நிலை இருந்தது என்றும், தற்போது அதிகரித்து வருவதாகவும் கூறினார். பாதுகாக்கப்பட்ட பகுதிகள் அதிகரிப்பு என்பது மற்றவர்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் தடுக்கு ஏற்பாடுதான் என தெரிவித்தார்.
சென்னையில் இருந்து சொந்த ஊருக்குச் சென்ற வெளிமாநில, வெளிமாவட்ட மக்கள் 3 லட்சம் பேர் மீண்டும் சென்னை திரும்பியதால் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில், தொற்றில் இருந்து குணமடைபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது என தெரிவித்தார். 40 ஆயிரம் களப்பணியாளர்கள் தொடர்ந்து பணி செய்து வருவதாகவும் விரைவில் கட்டுக்குள் கொண்டுவரப்படும் எனவும் அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1486 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1486 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1486 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1486 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1486 Days ago