யாழ்.மாவட்டத்தில் தனிமைப்படுத்தல் பீ.சி.ஆர். பரிசோதனை முடிவுகள் இன்று மாலை வெளியாகும் - த.சத்தியமூர்த்தி
Oct 05, 2020 245 views Posted By : YarlSri TV
யாழ்.மாவட்டத்தில் தனிமைப்படுத்தல் பீ.சி.ஆர். பரிசோதனை முடிவுகள் இன்று மாலை வெளியாகும் - த.சத்தியமூர்த்தி
யாழ்.மாவட்டத்தில், வடமராட்சி கிழக்கு மற்றும் புங்குடுதீவு உள்ளிட்ட தனிமைப்படுத்தல் பகுதிகளில் உள்ள சுமார் நூற்றிக்கும் மேற்பட்டவர்களுடைய பீ.சி.ஆர். பரிசோதனை முடிவுகள் இன்று மாலை வெளியாகும் என யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தொிவித்துள்ளார்.
இன்றையதினம் யாழ்.போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தொிவிக்கும் போதே த.சத்தியமூர்த்தி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்..
இந்திய மீனவர்களுடன் தொடர்புகளை பேணியதற்காக வடமராட்சி கிழக்கில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் மற்றும்
யாழ்.புங்குடுதீவில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் என சுமார் நூற்றிற்கும் மேற்பட்டவர்களுடைய பீ.சி.ஆர் பரிசோதனை முடிவுகள் இன்று மாலை வெளியாகும்.
இதேவேளை யாழ்.போதனா வைத்தியசாலையிலும், யாழ்.பல்கலைகழக மருத்துவபீடத்திலும் இதுவரை சுமார் 13 ஆயிரத்திற்கும் அதிக பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது..
யாழ்.போதனா வைத்தியசாலையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களை சிகிச்சையளிக்கும் சிறப்பு விடுதி தொடர்ந்தும் செயற்பாட்டில் இருக்கின்றது. இன்றும் ஒருவர் சந்தேகத்தினடிப்படையில் சேர்க்கப்பட்டுள்ளார். என பணிப்பாளர் மேலும் தொிவித்திருக்கின்றார்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1488 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1488 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1488 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1488 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1488 Days ago