வவுனியா கல்மடுவில் நேற்று இரவு சட்டவிரோதமாக கடத்த முற்பட்ட முதிரை மரக்குற்றிகள் இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டுள்ளன!
Oct 07, 2020 252 views Posted By : YarlSri TV
வவுனியா கல்மடுவில் நேற்று இரவு சட்டவிரோதமாக கடத்த முற்பட்ட முதிரை மரக்குற்றிகள் இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டுள்ளன!
வவுனியா கல்மடுவில் நேற்று இரவு சட்டவிரோதமாக கடத்த முற்பட்ட முதிரை மரக்குற்றிகள் இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
நேற்று (06) வவுனியா பூவரசங்குளம் பகுதியிலுள்ள இராணுவத்திற்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் வவுனியா கல்மடு பகுதியிலிருந்து வவுனியா நோக்கி சட்டவிரோதமாக கடத்தப்படவிருந்த ஐந்து இலட்சம் பெறுமதியான 12 முதிரை மரக்குற்றிகளையும் பட்டா ரக வாகனத்தினையும் கைப்பற்றியுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட வாகனத்தையும், மரக்குற்றிகளையும் பூவரசங்குளம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் தப்பியோடியுள்ளனர். குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய நபர்களை பூவரசங்குளம் பொலிஸார் தேடி வருவதாகவும் மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா நீதவான் நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
சில சுவாரஸ்யமான செய்திகள்
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1492 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1492 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1492 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1492 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1492 Days ago