Skip to main content

வவுனியா வேலங்குளம் விமானப்படை தனிமைப்படுத்தப்பட்ட 182 பேர் இன்றைய தினம் விடுவிக்கப்பட்டனர்!

Oct 02, 2020 226 views Posted By : YarlSri TV
Image

வவுனியா வேலங்குளம் விமானப்படை தனிமைப்படுத்தப்பட்ட 182 பேர் இன்றைய தினம் விடுவிக்கப்பட்டனர்! 

ஜோர்தானில் இருந்து இலங்கை திரும்பியவர்களை வவுனியா வேலங்குளம் விமானப்படை தனிமைப்படுத்தல் முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்ததன் பின்னர் 182 பேர் இன்றைய தினம் விடுவிக்கப்பட்டனர்.



கொவிட்-19 நோய் தாக்கம் காரணமாக வெளிநாடுகளில் சிக்கித்தவித்த இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்து வரும் செயற்பாடுகள் அரசினால் முன்னெடுக்கப்பட்டிருந்தது.



அந்தவகையில் ஜோர்தானிலிருந்து அழைத்துவரப்பட்ட பயணிகள் வவுனியா வேலங்குளம் விமானப்படை தனிமைப்படுத்தல் முகாமிற்கு அழைத்து வரப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.



அவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தல் காலத்தை நிறைவு செய்த நிலையில், 182 பேர் அவர்களது சொந்த இடங்களான மாத்தறை, கொழும்பு, குருநாகல், கண்டி போன்ற பகுதிகளிற்கு பேருந்துகள் மூலம் அனுப்பிவைக்கப்பட்டனர்.



குறித்த பயணிகளிற்கான பி.சி.ஆர் பரிசோதனைகளும் முன்னெடுக்கப்பட்டிருந்ததுடன், கொரோனா தொற்று பீடிக்கவில்லை என்று உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே அவர்கள் தமது சொந்த இடங்களிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.



இதேவேளை வவுனியா மாவட்டத்தில் வேலங்கும் விமானப்படை தனிமைப்படுத்தல் முகாமில் இருந்து கடந்த நான்கு மாதங்களில் மாத்திரம் 1102 பேருக்கு மேற்பட்டோர் வெளியேறியிருந்தமை குறிப்பிடத்தக்கது


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை