Skip to main content

சுரேன் ராகவன் இன்று கிளிநொச்சி இரணைமடு விவசாய சம்மேளன உறுப்பினர்களை சந்தித்து கலந்துரையாடினார்!

Sep 20, 2020 249 views Posted By : YarlSri TV
Image

சுரேன் ராகவன் இன்று கிளிநொச்சி இரணைமடு விவசாய சம்மேளன உறுப்பினர்களை சந்தித்து கலந்துரையாடினார்! 

நாடாளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன் இன்று கிளிநொச்சி இரணைமடு விவசாய சம்மேளன உறுப்பினர்களை சந்தித்து கலந்துரையாடினார்.



குறித்த சந்திப்பு இன்று பிற்பகல் 5 மணியளவில் இரணைமடு விவசாய சம்மேளன கட்டடத்தில் இடம்பெற்றது. வடக்கு மாகாண ஆளுநராக இருந்த காலம் தொட்டு இரணைமடு விவசாய சம்மேளனத்தினர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் சுரேன் ராகவனின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு வந்தது.



இந்த நிலையில் இன்று கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினருக்கும் விவசாயிகளிற்கும் இடையில் குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதன்போது இரணைமடு குளத்தின் கீழ் மண்ணகழ்வு இடம்பெறுகின்றமை, குளத்தின் பாதுகாப்பு மற்றும் கட்டுமானங்கள், விவசாய செய்கையாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் இதன்போது நாடாளுமன்ற ஊறுபினரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் என்ன ஆனார்கள்?...

12 Hours ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை