Skip to main content

மீனவர்கள் கடற்றொழிலில் ஈடுபடுவதை தவிர்க்குமாறு கடற்றொழில் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது!

Sep 22, 2020 266 views Posted By : YarlSri TV
Image

மீனவர்கள் கடற்றொழிலில் ஈடுபடுவதை தவிர்க்குமாறு கடற்றொழில் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது! 

வங்காள விரிகுடாவை அண்மித்த கடற் பிராந்தியங்களில் மீனவர்கள் கடற்றொழிலில் ஈடுபடுவதை தவிர்க்குமாறு கடற்றொழில் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.



நீண்ட நாள் மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்களும் இது குறித்து எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும் என அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.



இதனைத் தவிர வங்காள விரிகுடாவின் மத்திய, கிழக்கு, வட கிழக்கு கடற்பிராந்தியங்களில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியமுள்ளதால்,



ஆழமான கடற்பிராந்தியங்களுக்குச் செல்ல வேண்டாம் என ஒரு நாள் மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்களுக்கும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை