Skip to main content

சீனாவுடனான லடாக் எல்லை பிரச்னை இன்னும் தீரவில்லை என அமைச்சர் ராஜ்நாத் சிங் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்!

Sep 15, 2020 268 views Posted By : YarlSri TV
Image

சீனாவுடனான லடாக் எல்லை பிரச்னை இன்னும் தீரவில்லை என அமைச்சர் ராஜ்நாத் சிங் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்! 

இந்திய – சீன எல்லையான லடாக்கில், சீன ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 20 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். அந்த தாக்குதலின் போது சீன ராணுவத்தை இந்திய ராணுவம் விரட்டி அடித்த நிலையில், சீன ராணுவ அதிகாரி உட்பட 43 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. ஆனால் சீனா தரப்பில் இருந்து வீரர்களின் மரணம் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் வெளியாகவில்லை. இந்த சம்பவத்தில் இருந்தே லடாக்கில் பதற்றம் நிலவி வருகிறது.



இதனைத்தொடர்ந்து சீன ராணுவம் ஒப்பந்தத்தை மீறி மீண்டும் அத்துமீறியதால் இந்திய ராணுவத்துக்கு வலுசேர்க்கும் விதமாக 5 ரஃபேல் போர் விமானங்கள் விமானப்படையில் சேர்க்கப்பட்டன. இந்த நிலையில் சீனாவுடனான எல்லை பிரச்னை இன்னும் தீரவில்லை என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். லடாக் எல்லை பிரச்னையால் இந்திய சீன உறவில் தாக்கம் ஏற்படும் என்றும் எல்லையில் அத்துமீறக்கூடாது என சீன அமைச்சரிடம் எச்சரிக்கை விடுதிருப்பதாகவும் எல்லை ஆக்கிரமிப்பு முயற்சிகளை இந்திய ராணுவம் முறியடிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.



மேலும், நாட்டு மக்கள் ராணுவத்துக்கு பக்கபலமாக இருப்பதை பிரதமரின் லடாக் பயணம் தெரிவிப்பதாகவும் மலைப்பகுதியில் இருக்கும் ராணுவ வீரர்களுக்கு குளிர்காலத்தில் தேவையான சிறப்பு கருவிகள் வழங்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.



 


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

3 Days ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

3 Days ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

3 Days ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

3 Days ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

3 Days ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

3 Days ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

6 Days ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

6 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை