அண்ணா படத்துக்கு மாலை போடவில்லை! – துரைமுருகனுக்கு முதல்வர் பதில்
Sep 15, 2020 243 views Posted By : YarlSri TV
அண்ணா படத்துக்கு மாலை போடவில்லை! – துரைமுருகனுக்கு முதல்வர் பதில்
தற்காலிக சட்டப்பேரவை செயல்படும் கலைவாணர் அரங்கில் உள்ள அண்ணா படத்துக்கு கொரோனா காரணமாக மாலை அணிவிக்கவில்லை என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.
தமிழக சட்டப் பேரவையின் மூன்று நாள் கூட்டம் நேற்று தொடங்கியது. இன்று நீட், கொரோனா பற்றி பரபரப்பான விவாதங்கள் நடந்தன. தி.மு.க-வுக்கு சூடான பதிலடி அளிக்கப்பட்டது. இந்த நிலையில் சட்டப் பேரவைக்குள்
வைக்கப்பட்டுள்ள அண்ணா படத்துக்கு மாலை அணிவிக்காதது பற்றி தி.மு.க தரப்பில் வருத்தம் தெரிவிக்கப்பட்டது.
எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் பேசும் போது, “அண்ணா பிறந்தநாளை நினைவுபடுத்தி பேசும் போது மகிழச்சியாக உள்ளது. அவரின் படத்தைப் பார்க்கும் போது வருத்தமாக உள்ளது. பிறந்த நாள் அன்றாவது
அவரின் படத்திற்கு மாலை அணிவித்திருந்தால் மரியாதையாக இருந்திருக்கும்” என்றார். இதற்கு பதில் அளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “கொரோனா தொற்று காரணமாகவே அண்ணா படத்துக்கு மாலை அணிவிக்கவில்லை” என்றார்.
முன்னதாக சென்னை அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலை அருகே வைக்கப்பட்டிருந்த படத்துக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தியது குறிப்பிடத்தக்கது.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
6 Days agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
6 Days agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
6 Days agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
6 Days agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
6 Days agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
6 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1484 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1484 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1484 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1485 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1485 Days ago