மேம்பாலத்தின் மீது கார் மோதி விபத்து – ஒருவர் மருத்துவமனையில்
Sep 14, 2020 233 views Posted By : YarlSri TV
மேம்பாலத்தின் மீது கார் மோதி விபத்து – ஒருவர் மருத்துவமனையில்
வாணியம்பாடி தேசிய நெடுஞ்சாலையில் கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பாலத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் ஒரு படுகாயமடைந்து மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி, செட்டியப்பனூர் தேசிய நெடுஞ்சாலையில் பெங்களூரில் இருந்து சென்னை நோக்கி சென்ற நான்கு சக்கர வாகனம் கூட்டு சாலை அருகே அமைந்துள்ள மேம்பாலத்தின் மீது கட்டுப்பாட்டை இழந்து மோதி விபத்துக்குள்ளானது.
இதில் அந்த கார் 3 முறை சுழன்று விபத்துக்குள்ளானதில் வாகனத்தில் பயணித்த இரண்டு நபர்களில் ஒருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
அங்கிருந்த பொதுமக்கள் அவர்களை மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டனர்.
தகவலறிந்து வந்த போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1493 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1493 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1493 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1493 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1493 Days ago