Skip to main content

ரூ.42 ஆயிரம் கோடி மோசடி செய்த 2 பேர் கைது!

Sep 12, 2020 268 views Posted By : YarlSri TV
Image

ரூ.42 ஆயிரம் கோடி மோசடி செய்த 2 பேர் கைது! 

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த சஞ்சய் பாத்தி, ராஜேஷ் பரத்வாஜ் ஆகிய இருவரும் அந்த மாநிலத்தில் நிதி நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தனர். உத்தரபிரதேசத்தை தலைமையிடமாக கொண்ட இந்த நிறுவனத்துக்கு டெல்லி உள்ளிட்ட பிற மாநிலங்களில் பல கிளைகள் உள்ளதாக தெரிகிறது.



இந்த நிலையில் சஞ்சய், ராஜேஷ் ஆகிய இருவரும் தங்கள் நிறுவனத்தில் ரூ.1 லட்சத்து 24 ஆயிரம் முதலீடு செய்தால் மாதம் ரூ.17,000 வீதம் ஒரு ஆண்டில் ரூ.2 லட்சத்து 4 ஆயிரமாக திருப்பித்தரப்படும் என்கிற திட்டத்தை கடந்த ஆண்டு ஜனவரி மாதம் அறிவித்தனர்.



இதனை நம்பி டெல்லி, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் அந்த நிறுவனத்தில் முதலீடு செய்தனர்.



இந்த நிலையில் தங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்த வாடிக்கையாளர்களுக்கு வாக்குறுதி அளித்தபடி மாத தவணையை வழங்காமல் காலம் தாழ்த்தி வந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் பல புகார்கள் பதிவாகின. அதன்பேரில் விசாரணை நடத்தியதில் சஞ்சய், ராஜேஷ் ஆகிய இருவரும் பொதுமக்களிடம் வெற்று வாக்குறுதிகளை அளித்து பணத்தை வசூலித்து மோசடி செய்து வந்தது அம்பலமானது. அவர்களது நிறுவனத்தின் பெயரில் டெல்லி, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் 8 ஆயிரத்துக்கும் அதிகமான புகார்கள் பதிவாகி இருப்பதும் தெரியவந்தது.



மேலும் சஞ்சய், ராஜேஷ் தங்களின் நிறுவனம் மூலம் பல்வேறு மாநிலங்களில் இதுவரை ரூ.42 ஆயிரம் கோடி வரை மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சஞ்சய், ராஜேஷ் ஆகிய இருவரையும் நேற்று கைது செய்தனர். இந்த மோசடி தொடர்பாக போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

21 Hours ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

21 Hours ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

21 Hours ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

21 Hours ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

21 Hours ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

21 Hours ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

4 Days ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

4 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை