கொரோனா தடுப்பூசி விரைவில் பயன்பாட்டிற்கு வரும் – மோடி
Sep 14, 2020 257 views Posted By : YarlSri TV
கொரோனா தடுப்பூசி விரைவில் பயன்பாட்டிற்கு வரும் – மோடி
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று முதல் தொடங்கி அக்டோபர் 1 ஆம் தேதி வரை தொடர்ந்து 18 நாட்களுக்கு நடைபெற உள்ளது. இந்த தொடரில் மொத்தம் 47 மசோதாக்கள் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
இந்நிலையில் நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி செய்தியாளர்களை சந்தித்த போது, “நாடாளுமன்ற கூட்டத்தொடரை சுமுகமாக நடத்த எம்பிக்கள் அனைவரும் ஒத்துழைக்கவேண்டும் . அனைத்து உறுப்பினர்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிக்க வேண்டும்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “கொரோனா தொற்றைத் தடுக்க தடுப்பூசி விரைவில் பயன்பாட்டிற்கு வரும். கொரோனா முடிவுக்கு வரும் வரை அனைவரும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். உலகில் எங்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டாலும் பொதுமக்களுக்கு விரைந்து கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் “ராணுவ வீரர்கள் லடாக்கில் சோதனைகளை எதிர்கொண்டு பாதுகாப்பு உறுதி செய்கின்றனர். நாடு ஒன்றுபட்டு இந்திய ராணுவ வீரர்களுக்கு வலிமை அளிக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1490 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1490 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1490 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1490 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1490 Days ago